கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், கனரக வாகனமும் மோதி சாய்ந்தமருதில்
ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று(14) காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சாய்ந்தமருது கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த றமீஸ் என்னும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.