எனது அரசியல் அணியில் உள்ளவர்கள் அரசியல் நலனுக்காக கட்சித் தாவலில் ஈடுபடாதவர்களென ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனது அணியில் உள்ளவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம், பணம் போன்றவற்றுக்காக கட்சி தாவாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் இலாபங்களுக்காக இரகசிய உடன்பாடுகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லயென்பது கட்சியின் கொள்கை,கட்சியின் உறுப்பினர்களுக்கும் தனிநபர்களுக்கும் இது பொருந்துமென அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு ஏதாவது கிடைத்தால் அதனை நாங்கள் மக்களின் நன்மைக்காக பயன்படுத்துவோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தாலும் சரி பணத்துக்காக எவரையும் வாங்கமாட்டோம், அவ்வாறானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட அனுமதிக்கவும் மாட்டோம் . அவ்வாறான நபர்கள் எங்கள் பக்கத்தில் இல்லையென எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.