இந்த வருடத்தில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 11 நாட்களில், 73 ஆயிரத்து 373 சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள், 12 இலட்சத்து 71 ஆயிரத்து 432 சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில், அவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 37 ஆயிரத்து 649 ஆக காணப்படுகின்றது.
ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.