Tuesday, May 20, 2025

ஈழத்தின் பிரசித்தி பெற்ற செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாஇ தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

தேர்த்திருவிழாவில் பெறுந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும்.அங்க பிரதிஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

இதேவேளை , செல்வச்சந்நிதி முருகனுக்கு இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles