Wednesday, May 21, 2025

இ.போ.ச பேருந்தில் வாகன சில்லு உடைந்து விபத்து 

பதுளை ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பகுதியில் பயணித்து கொண்டிருந்த பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று நீங்கி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துக்குள்ளான பேருந்து பெத்தேகமயில் இருந்து ஸ்பிங்வெளி ஊடாக பதுளைக்கு சென்று கொண்டு இருக்கும் போது வீரியபுர பகுதியில் வைத்தே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து விபத்துக்குள்ளான போது பேருந்தில் சுமார் 80 பேர் வரை பயணித்துள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பயணிகள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles