Monday, May 12, 2025

யானை தாக்கி குடும்பஷ்தர் ஒருவர் பலி ஊரணி பகுதியில் சம்பவம்!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி பகுதியில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் இரவு (23:08:2024) வேளையில் இடம்பெற்றதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் 01 RDA வீதியை சேர்ந்த திருக்கோவில் பிரதேச சபையில் வாகன சாரதியாக பணிபுரியும் 50வயதுடைய திரு.அ.மனமோகன் என்பவரே இத் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்!

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸாசார் மேற்கொண்டு வருகின்றனர்!

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles