Wednesday, May 21, 2025

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாக தெரிவித்து ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த ஒலிப்பதிவை வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில், கிளிநொச்சியில் இருந்து ஒரு நபரால் கதைக்கப்பட்டது என்னுடைய கைக்கு வந்துள்ளது.

வெகுவிரைவில் சம்பந்தப்பட்ட நபரின் விபரத்துடன் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்ட பின் மக்களுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கிறேன்.

என்னை கொல்வதற்கு தன்னுடைய ஆட்களிடம் 25 கோடி வந்துள்ளது என காசு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்று அவர் கதைத்துள்ள ஆடியோ ஆதாரம் என்னுடைய கையில் உள்ளது.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்புறம் இருப்பதாக நான் அறிகிறேன் பொலிஸார் அதனை விசாரணையில் கொண்டு வருவார்கள் என நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles