Wednesday, May 21, 2025

மன்னார் நீதிமன்றங்கள் தாக்கப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு 66 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை

மன்னார் நீதிமன்றத்தை தாக்கிய வழக்கில் 53 சந்தேக நார்களில் 47 சந்தேக நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் நான்கு சந்தேக நபர்கள் ஒன்பது குற்றங்களுக்கு குற்றவாளிகளாக காணப்பட்டு அவர்களுக்கு ஒன்பது குற்றங்களுக்கும் 66 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் இரண்டு லட்சத்து ஐம்பத்தையாயிரம் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது

2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 18ந் திகதி மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 53 நபர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பின் இவ்வழக்கானது 2013 ஆம் ஆண்டு மன்னார் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 12 வருடங்களாக இவ்வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 28.08.2024 புதன் கிழமை இவ்வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்களாக காணப்பட்டவர்களில் 53 சந்தேக நபர்களில் 04 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக மன்று தீர்ப்பளித்தது.

ஏனைய சந்தேக நபர்களில் இரண்டு பேர் மரணித்திருந்த நிலையில் ஏனைய 47 பேரும் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

குற்றவாளிகளாக காணப்பட்ட நான்கு பேருக்கும் தண்டனை தீர்ப்பு வழங்குவதற்காக 2024.09.04ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அன்று கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் புதன்கிழமை (04.09.2024) இந்த வழக்கு மீண்டும் மன்னார் மேல் நிதிமன்றில் நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் தண்டனை தீர்ப்புக்காக அழைக்கப்பட்டது.

இதன்போது குற்றவாளிகளாக காணப்பட்ட 20 , 22 , 31 மற்றும் 42 ஆகிய குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு எதிராக ஒன்பது குற்றங்களுக்கு தண்டணைகள் விதிக்கப்பட்டன

அதாவது இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் முதலாவது குற்றம் சட்ட விரோதமாக கூட்டத்தை கூட்டியமை

அடுத்து. இரண்டிலிருந்து ஒன்பது வரை பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை அதாவது மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சேதம் விளைவித்தமை

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்து;க்கு சேதம் விளைவித்தமை . மன்னார் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக் கிளைகள் தாக்கலுக்கு உள்ளாகியமை. , பஸ் வண்டிகள் தாக்கமை , முருங்கன் நீர்பாசன பொறியியலாளர் வாகனம் தாக்கப்பட்டமை , மன்னார் மாவட்ட நீதிமன்ற காணியில் தரித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லொரிகள் தாக்கப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டகளாக இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இதற்கு அமைவாக இந்த நான்கு பேருக்கும் இந்த குற்றங்களுக்காக தீர்ப்பு வழங்குவதற்கு முன் புதன்கிழமை (04) மன்றில் எதிரிகள் சார்பாக முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகள் எதிரிகளுக்கு தண்டணை தணிப்பு சம்பந்தமாக விண்ணப்பங்களை மன்றில் முன் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில் இந்த வழக்கில் எதிரிகளுக்கு ஒத்திவைக்கட்ட சிறை தண்டனை விதிக்கப்படல் உசிதமல்ல.

குறித்த குற்றச் செயல்களுக்கு சமூகத்துக்கு படிப்பினையாக அமையும் வகையில் மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் வகையில் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மன்று தீர்மானித்துள்ளது.

இதற்க அமைவாக முதலாவது குற்றச்சாட்டுக்கு நான்கு பேருக்கும் ஆறு மாதம் கடூழிய சிறைத் தண்டணையும் 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதுடன் தண்டப்பணம் செலுத்தத் தவறின் மூன்று மாதம் சிறைத் தண்டனையும்,

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 18 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டணையும் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறின் ஆறு மாதம் சிறைத் தண்டணையும்

முன்றாவது குற்றச் சாட்டுக்கு 18 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டணையும் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறின் ஆறு மாதம் சிறைத் தண்டணையும்

மேலும் நான்கிலிருந்து ஒன்பது வரைக்குமான குற்றச்சாட்டுகளுக்கு நான்கு மாதங்கள்படி கடூழிய சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் தண்டனை செலுத்த தவறின் முன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

  • இதன் பிரகாரம் அனைத்து தண்டணைகளுக்கும் மொத்தமாக 66 மாதங்கள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களாகவும் இரண்டு இலட்சத்து ஐம்பத்தையாயிரம் ரூபா தண்டப்பணமாகவும் இக்குற்றவாளிகள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles