Tuesday, May 13, 2025

மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம்’ கவனயீர்ப்பு போராட்டம்

நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் நோயாளிகள் தகுந்த முறையில் மருந்து வகைகளை பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலை மன்னார் வைதத்pயசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது. நோளார்களுக்கு மருந்து வகைகளை வெளியில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும்போது இதனால் வைத்தியர்களாகிய எங்களை பொது மக்கள் திட்டும் நிலைக்கு நாங்கள் உள்ளாகி வருகின்றோம்.

அரசானது வைத்தியசாலைகளுக்கு சரியான முறையில் மருந்து வகைகளை வழங்காமையால் நாங்கள் நோயாளர்களுக்கு தகுந்த பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இதனால் வைத்தியர்களாகிய நாங்கள் உண்மை நிலையை எடுத்தியம்பும் முகமாக கவனயீர்ப்பு போரட்டத்தை இன்று (03) நடாத்துகின்றோம். என போராட்டத்தில் கலந்து கொண்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய் கிழமை (03) மதியம் 12 மணி தொடக்கம் பிங்பகல் ஒரு மணி வரை மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

வைத்தியர்கள் இந்த போராட்டத்தின்போது தங்கள் கரங்களில் ஏந்திருந்த பதாதைகளில் ‘நியாயமான குரல்களை நசுக்காதே’ ‘தொழிற்சங்க உரிமைகளை நசுக்காதே’ ‘ மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம்’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இக்கவன போராட்டத்தின்போது நோயாளர்களுக்கு எந்தவிதமான அசௌரியங்களும் இடம்பெறாத முறையில் சாப்பாட்டு நேர வேளையிலேயே இந்த கவனயீர்ப்பு பொராட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles