Tuesday, May 20, 2025

உள்நாடு தனியார்துறையினருக்கு ஓய்வூதியத்தை வழங்குவேன் – அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு

தனியார்துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக, அதன் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கமொன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்புச் செய்கின்றனர். ஒவ்வொருவரும் இத்தனை வயது வரைதான் வேலை செய்யவேண்டும் என்றொரு விடயம் உள்ளது. ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும். எனவே, தனியார் துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles