ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மன்னார் மாவட்டத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்றபோது மரியாதை நிமித்தமாக வன்னி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதனை அறிந்த ஆதாரவளர்களும் குறித்த பகுதியில் திடீரென திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் குழப்பம் நீடிக்கும் சூழலில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அரசியல் ரீதியில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்.
முன்னுக்கு பின் முரணாகவும், முடிவுகளின்றியும் தமிழரசுக் கட்சி காலை மாலை என மாறுபட்ட அறிக்கைகளை இந்த காலப்பகுதியில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.