எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக தமிழ்ப்பொது அமைப்புகளும் 7 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தன.
இந்த அமைப்பின் பொதுச் சபையே இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் கூடி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்துப் பேசவுள்ளன என்று தெரிய வருகின்றது.