Monday, May 19, 2025

வடக்கில் படையினர் சலூன் நடத்தினால் நமது நிலை என்ன? அனுராவிடம் பதிலை எதிர்பார்க்கும் சங்கம்!!

அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர்.

தொடர்ந்து தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் அழககங்களை நடாத்துவதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமாகாணத்தில் புதிய அழகக சங்கங்களை அமைப்பதற்கு உள்ளூராட்சி பணிமனை அனுமதி தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles