சுயநலமற்ற தமிழ் தேசிய இடதுசாரி கொள்கையோடு எந்தக் கட்சியையும் சாராமல் தனித்து நின்று போட்டியிடுகின்றார்.
இன்று வாகரை பிரதேசங்களிலே மிகவும் வறுமைக்கப்பட்டு இருக்கின்ற எமது தமிழ் மக்களை சந்திப்பதற்காக நேரடி கள விஜயம் சென்ற பொழுது மக்களின் பரிதாப நிலையை கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
இன்று அதிகாரத்தில் இருக்கின்ற எத்தனையோ பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் எமது மக்கள் வீதியிலே தங்களுடைய வயித்து பிழைப்புக்காக கையேந்தும் நிலையை காணும்பொழுது மிகவும் வேதனை அளிக்கிறது.
நிச்சயமாக எமது சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் ஊழலற்ற விலை போகாத சிறந்த அரசியல் தலைவன் ஒருவன் எமக்கு தேவைப்படுகின்றது அதன் அடிப்படையில் இளைய சமுதாயமாகிய நாம் அருள்தாசன் அவர்களை தெரிவு செய்துள்ளோம் எமது தாய் தமிழ் உறவுகளே அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற செய்வோம்.