Wednesday, May 21, 2025

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது

சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்காணிப்பு தளத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்றும் காணப்பட்டுள்ளது. பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles