சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்காணிப்பு தளத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்றும் காணப்பட்டுள்ளது. பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது.