இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சசிகலா ரவிராஜூம் விலகவுள்ளார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சசிகலா ரவிராஜூக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சசிகலா ரவிராஜ் கட்சியை விட்டு விலகவுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.