Monday, May 12, 2025

75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு-இராணுவ வீரர்களுக்கு நினைவேந்தல்

இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நேற்று பத்தரமுல்லை போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றிருந்தது

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கலந்துகொண்டிருந்ததுடன் தேசிய கீதத்தை பாடியதன் பின்னர் தேசத்தை காக்க உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தளபதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியிருந்தனர்

இந்த நிகழ்வில் இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரெஜிமென்ட் தளபதிகள் வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியதுடன், இராணுவத்தின் பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles