Tuesday, May 20, 2025

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய 4 படகுகளும் மீட்கப்பட்டன.

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கைளிக்கப்படவுள்ளனர்.

மேற்படி 21 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles