Tuesday, May 13, 2025

திடீரென தீ பற்றி எரிந்த 50 பயணிகளுடன் சென்ற பேருந்து – இன்று காலையில் பதற்றம்

இரத்தினபுரி – கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் பயணித்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

அதன்படி இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே தீக்கிரையாகியுள்ளது.

பேருந்தில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயமோ அல்லது பாரிய காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles