Tuesday, May 13, 2025

பாலம் இடிந்து விழுந்ததில் 13 பேர் மாயம்..!

வடக்கு வியட்நாமில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 மகிழுந்துகள் மற்றும் 2 உந்துருளிகள் ஆற்றில் கவிழ்ந்துள்ளன.

யாகி (Yagi) புயலின் தாக்கத்தால் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் 13 பேர்வரையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாகி (Yagi) புயல் காரணமாக வியட்நாமில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு இதுவரை 59 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles