Wednesday, May 21, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபவின் வங்கி கணக்குகள் முடக்கம்! நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், கொக்கல மற்றும் மத்துகமவில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாத காலத்துக்கு தடை செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles