கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிறபொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இவ் வழக்கில் முன்னலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் 2018 ஆம் ஆண்டு சதொச வர்த்தக நிலைய கட்டிடம் அமைப்தற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இக் கட்டிடம் இடைநிறுத்தப்பட்டு இவ்விடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கும் அகழ்வு பணிகள் இடம்பெற்றது.
இதில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இவற்றின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக எடுத்துச் செல்லப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக இவ் வழக்கில் முன்னலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கையில்
மன்னார் நீதவான் நீதிமன்றில் மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி வழக்கு கடந்த திங்கள் கிழமை (07) தொடக்கம் வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே இந்த புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித கூட்டுத் தொகுதியோடு காணப்பட்ட வேறு பொருட்கள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தவற்றை பகுப்பாய்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றன.
பல வருடங்களுக்கு பிற்பாடு இந்த ஐந்து நாட்களும் பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவினரும் சட்டவைத்திய அதிகாரி குழுவும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் காணாமல்போன அலுவலக அலுவலர்களும் , பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிவரும் சட்டத்தரணிகளும் , நீதிமன்ற அலுவலர்களும் இணைந்து தரம் பிரிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்றது.
கண்டு பிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் பிறம்பாகவும் அதனோடு கண்டுபிடிக்கப்பட்ட பிறப்பொருட்கள் பிரிம்பாகவும் பிரித்தெடுக்கப்பட்டு இவைகள் பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்றில் இந்த ஐந்து நாட்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றது.
இது தொடர்பாக மேலதிக விடயங்களாக இந்த மனித எழும்புக் கூடுகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளும் மனித புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பாகவும் முள்ளாள் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் தொல்பொருள்களின் அறிக்கையையும் நீதமன்றம் கோரி நிற்கின்றது.
ஆகவே இவர்கள் இது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை (16) மன்னார் நீதவான் நீமன்றில் இவ் வழக்கு எடுக்கப்படுகின்றபோது இது தொடர்பாக தீர்மானிக்கப்பட இருப்பதாகவும்
ஆகவே இவர்கள் உரிய சான்றுப் பொருட்களை தங்கள் நிறுவனங்களுக்கு கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு இவற்றை அகழ்வு ஆராய்ச்சி செய்து இவைகள் எக்காலப் பகுதிக்கு உரியவை என்றும் இறப்புக்குக்கான காரணம் வயது , பால் போன்ற விடயங்கள் சம்பந்தமான அந்தலபோலஜி அறிக்கையையும் நீதிமன்றில் சமர்பிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
அத்துடன் இதற்கான கால அவகாசமும் எதிர்வரும் புதன்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் நீதமன்றில் இவ் வழக்கு எடுக்கப்படுகின்றபோது தெரிவிக்கப்படும் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்னார் மனித புதைகுழி வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.
இதே வேளையில் கடந்த திங்கள் கிழமை (07) இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதமன்றில் எடுக்கப்பட்டிருந்த பொழுது கடந்த புதன்கிழமை (09) மன்னார் சதொச மனித புதைகுழி அமைந்துள்ள அண்டிய ஒரு சில இடங்கள் நீதவான் முன்னிலையில் பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் தலைமையில் அகழ்வு செய்து பரிசோதித்த செயற்பாடும் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.