Wednesday, May 21, 2025

தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அநுர அரசாங்கத்தின் உண்மை முகம்!

தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அநுர அரசாங்கத்தின் உண்மை முகம்!

போருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்தையும் விட மோசமான அரசாங்கமாக, தமிழருடைய இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டுமே எனக் கூறியமை அநுர அரசாங்கத்தினுடைய உண்மையான முகத்தை காட்டுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில், எந்தவொரு இடத்திலும் இராணுவத்தினருக்கோ முப்படையினருக்கோ எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என இவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது வெறுமனே இனவாதத்தை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தப் போவதாக திரும்ப திரும்ப கூறி தமிழினத்தையும் நம்ப வைக்கும் இவர்களது நடவடிக்கை தற்போது ஜெனீவா தொடர்பான செயற்பாடுகளில் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles