Monday, July 14, 2025

மன்னார் சங்குப்பிட்டி பாலத்தினூடாக பயணிப்போருக்கு அவதான எச்சரிக்கை.

மன்னார் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பிரதான வீதியிலுள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் ஒரு சிறு பகுதி கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளமையால் மறு அறிவுறுத்தல் வரும் வரைக்கும் கனரக வாகனங்கள் இப்பாதைக்கூடாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழியாக மன்னார் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் கனரக வாகனங்கள் பரந்தன் ஊடாக யாழ் செல்லுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சங்குப்பிட்டி பாலம் ஊடாக பேரூந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இந்த இடத்தில் பேரூந்திலிருந்து இறங்கி நடந்து சென்றே பாதிப்படைந்துள்ள இடத்தை கடந்து செல்லவும் பயணிகள் அற்ற நிலையிலேயே பேரூந்தும் இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலத்தின் ஒரு பிளேற் பகுதி துருப்பிடித்து அப்பகுதி ஆட்டம் காணப்படுவதால் கனரக வாகனங்கள் மற்றும் பயணிகளுடன் பேரூந்துகள் இவ்விடத்தை கடந்து செல்வது பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் இவ்விடத்தை கடந்து செல்லும்போது மிகவும் அவதானத்துடன் மெதுவாக செல்ல வேண்டும் என்றும்
இதை புனரமைப்பதற்காக கொழும்பிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஒரு வாரத்துக்குள் இது சரி செய்யப்பட்டு விடும் என இது தொடர்பான அதிகாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles