Tuesday, January 21, 2025

யூ.என்.பி உறுப்பினர்களுக்கும் சிலிண்டருக்கு வாக்களித்த அனைவருக்கும் எங்கள் கதவு திறந்திருக்கிறது -சஜித் பிரேமதாச!

ஜனாதிபதி பொதுத் தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்கிரமசிங்க அனாதைகளாக்கியுள்ளார். அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும், சகலருக்கும் தமது SJB கட்சி கதவு திறந்திருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் முடியாது போனாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி குறைப்பு உடன்படிக்கையை எட்டுவோம்.இன்று தேங்காய்க்கு கூட வரிசை ஆரம்பித்து உள்ளது.

ஒன்றுபட்ட மக்கள் ஆட்சியில், மக்கள் வரிசையில் நிற்கும் காலம் ஒழிக்கப்பட்டு, வரிச்சுமை குறைக்கப்பட்டு, வளமான யுகமாக அமையும் என்று இங்கு அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles