Wednesday, January 15, 2025

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் திங்கட்கிழமை (11.11.2024) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (12.11.2024) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அண்மையில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியாயமான காரணங்களின்றி குறித்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles