Wednesday, January 15, 2025

யாழில் மழை அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் மின்னல் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles