Tuesday, January 21, 2025

நெடுந்தீவு கடற்பகுதியில் 23 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கடற்படையினரால் நேற்று(10.11.2024) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மூன்று கடற்றொழில் படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles