Wednesday, January 22, 2025

ஊழல் செய்வதில் நான் ஆளுமையற்றவன் – K.காதர் மஸ்தான்

பிரச்சார மேடைகளில் என்னை ஆளுமையற்றவன் என விமர்சித்தார்கள்.
நான் ஆளுமையற்றவன் தான். ஊழல் மற்றும் களவு செய்வதில் நான் ஆளுமையற்றவன், அரச அதிகாரிகளைத் திட்டுவதில் நான் ஆளுமையற்றவன், ஆனால் மக்களுக்கு நன்றாகவே சேவயாற்றியுள்ளேன், திட்டமிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறேன் அதனால் தான் மக்கள் என்னை தெரிவு செய்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டிருப்பவருமான K. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மன்னார் எமில்நகர் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்து சென்ற சூறாவளியில் வடக்கு கிழக்கில் பல அரசியல் வாதிகள் காணாமல் போயுள்ளார்கள்,மன்னார் மாவட்டத்தில் என்னோடு சேர்த்து தெரிவான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் எனது விருப்பு வாக்கு அதிகமாகவுள்ளது.
மக்கள் எனக்குப் பெருமளவில் ஆதரவை வழங்கியுள்ளனர். அந்த மக்களுக்கும், என் சார்பாக மக்களுக்கு எடுத்துரைத்த ஆதரவாளர்கள், மற்றும் பிரதேச தலைவர்களுக்கும் இந்த வேளையில் நன்றி கூறுகிறேன்.”

“அதே வேளை பாரியளவில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மற்றும் அவர் கட்சி சார்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு, ஊழலை ஒழிப்பதற்கும் மக்களின் வறுமையைப் போக்கவும் பாடுபடுகிற ஜனாதிபதியோடு சேர்ந்து நானும் மக்களுக்கான சேவைகளைச் செய்வேன். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles