Tuesday, January 21, 2025

தனிமைப் படுத்தப்பட்ட இராணுவ வீரர்கள்

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமாண்டோ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத்
தெரிய வருகின்றது.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது அவர்களுக்கு மூளைக் காய்ச்சல் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்துமாறு வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில்,அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதுடன் தொற்றினால் பாதிக்கபட்ட நால்வர் கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles