தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவியேற்பு இடம்பெறுகிறது.
23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல் ஹரிணி அமரசூரியவே தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.