Wednesday, January 15, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டார்.

முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அது நிறைவேற்றப்படவில்லை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles