Sunday, February 9, 2025

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் நாச்சிகுடா, இரணைதீவுப் பகுதியில், இரண்டு விசைப்  படகுகளுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 மீனவர்களை இன்றைய தினம் (12.01), ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக்  கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளி நொச்சி மாவட்டம் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles