Sunday, February 9, 2025

மன்னார்   துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச்  சிப்பாய்  உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராணுவச்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டு,
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை(16.01) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் விசாரணைகளுக்காகச் சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு பேர் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார்   மேற்கொண்ட விஷேட    தேடுதலில், சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் பேசாலை நடுக்குடாப்  பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த  ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு  பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டு  விசாரணைகள் முன் னெடுக்கப்பட்ட நிலையிலேயே மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இது குறித்து மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles