மன்னாரில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு |මන්නාරම ඡන්ද මධ්යස්ථාන වෙත ඡන්ද පෙට්ටි බෙදා හැරීම
2025.05.06 ந் திகதி மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் ஐந்து உள்ளுராடசி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் திங்கள் கிழமை (2025.05.05) வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பிரதான மத்திய நிலையமாகிய மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து மன்னாரில் நடைபெற இருக்கும் 114 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தேர்தல் செவ்வாய்கிழமை (06.05) காலை 07 மணி தொடக்கம் பிற்பகல் 04 மணி வரை நடைபெறுவதுடன் மன்னார் மாவட்டத்தின் ஐந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 103 உறுப்பினர்கள் தெரிவுக்கு 91373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.