பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் ஜிம்ரோன் நகர் பகுதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் எடையுள்ள செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் 19 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், மாவட்ட குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.